follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபழங்குடியினர் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை

பழங்குடியினர் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை

Published on

கிழக்கு மாகாண கரையோரபகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், வனப்பகுதிகளில் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூதூர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

மீன்பிடி அவர்களது பிரதான தொழிலாக இருந்தாலும் கூட நாட்டின் தற்போதைய நிலை, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர்கள் தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதும், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தாக குவேனி பழங்குடி நலன்புரி அமைப்பின் தவிசாளரும் மூதூர் பழங்குடியினர் சங்கத் தலைவருமான கே.கனகரத்னம் தெரிவித்துள்ளார்.

தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

அதற்கமைய அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்த பிரதேசத்திற்கு பிரவேசித்து தேன் எடுப்பவர்களுக்காக அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...