follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபழங்குடியினர் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை

பழங்குடியினர் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை

Published on

கிழக்கு மாகாண கரையோரபகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், வனப்பகுதிகளில் தேன் சேகரிப்பதற்கான அடையாள அட்டையை வழங்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூதூர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

மீன்பிடி அவர்களது பிரதான தொழிலாக இருந்தாலும் கூட நாட்டின் தற்போதைய நிலை, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர்கள் தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதும், அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தாக குவேனி பழங்குடி நலன்புரி அமைப்பின் தவிசாளரும் மூதூர் பழங்குடியினர் சங்கத் தலைவருமான கே.கனகரத்னம் தெரிவித்துள்ளார்.

தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

அதற்கமைய அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்த பிரதேசத்திற்கு பிரவேசித்து தேன் எடுப்பவர்களுக்காக அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...