22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் எதிர்ப்பை வெளியிட தயார் – வாசுதேவ

365

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறாவிட்டால் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உத்தர லங்கா சபையின் உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பிள் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here