follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு22ஆவது திருத்தம் குறித்து நல்ல முடிவு எட்டப்படும் – தயாசிறி ஜயசேகர

22ஆவது திருத்தம் குறித்து நல்ல முடிவு எட்டப்படும் – தயாசிறி ஜயசேகர

Published on

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டமூலம் குறித்து சுதந்திரக் கட்சி நல்லதொரு தீர்மானத்தை மேற்கொள்ளும் என நம்புவதாக அதன் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் 30 உறுப்பினர்கள் இதற்கு எதிராக இருப்பதாக சாகர காரியவசம் தெரிவித்தாலும் சட்டமூலத்தை நிறைவேற்ற இந்த எண்ணிக்கை தடையாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற 225 உறுப்பினர்களில் 147 பேரின் வாக்குகளே தேவை என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவுவது என்பது அரசாங்கத்தின் பிரச்சினை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...