follow the truth

follow the truth

August, 6, 2025
Homeஉள்நாடு22ஆவது திருத்தம் குறித்து நல்ல முடிவு எட்டப்படும் – தயாசிறி ஜயசேகர

22ஆவது திருத்தம் குறித்து நல்ல முடிவு எட்டப்படும் – தயாசிறி ஜயசேகர

Published on

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டமூலம் குறித்து சுதந்திரக் கட்சி நல்லதொரு தீர்மானத்தை மேற்கொள்ளும் என நம்புவதாக அதன் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் 30 உறுப்பினர்கள் இதற்கு எதிராக இருப்பதாக சாகர காரியவசம் தெரிவித்தாலும் சட்டமூலத்தை நிறைவேற்ற இந்த எண்ணிக்கை தடையாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற 225 உறுப்பினர்களில் 147 பேரின் வாக்குகளே தேவை என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவுவது என்பது அரசாங்கத்தின் பிரச்சினை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...