மைத்திரி மற்றும் தயாசிறியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

463

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தாம் வகிக்கும் பதவிகளைப் பறிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here