follow the truth

follow the truth

August, 10, 2025
Homeஉள்நாடுபணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலனை

பணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலனை

Published on

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் செலவினக் குறைப்புகளுக்கு மத்தியில் சுகாதார சேவையை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 30 சதவீத பணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

இது செலவை மீட்டெடுப்பதற்கு மட்டுமல்ல, தனியார் துறையைவிட எங்களால் சிறந்த சேவையை வழங்க முடியும் என்றும் ஒரு அறையுடன் சிறந்த சேவையை மக்கள் பார்த்தால், அவர்கள் கட்டண வார்டுகளுக்குச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

அரச வைத்தியசாலைகளில் தனியான ஷிப்ட் அடிப்படையிலான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், இலவச மற்றும் கட்டண வார்டுகளுக்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பணம் செலுத்தும் வார்டு முறையானது சத்திரசிகிச்சைகளுக்காக காத்திருக்கும் வரிசையை 2 வருடங்களுக்குப் பதிலாக ஆறு மாதங்களாக குறைக்கும் என சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், உத்தேச பணம் செலுத்தும் வார்டு முறைமை இன்னும் அமைச்சரவைக்கு முன்மொழியப்படவில்லை என்றும் கூறினார்.

கொழும்பு தேசிய மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான யோசனை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...