follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுநாமலின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு சஜித் எச்சரிக்கை!

நாமலின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு சஜித் எச்சரிக்கை!

Published on

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் புனர்வாழ்வு பணியகத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிப்பதன் நியாயம் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜபக்சக்கள் புனர்வாழ்வு பணியகத்தைப் பயன்படுத்தி தமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து, மஹிந்த ராஜபக்சவின் மகன்கள் தமக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியகம் தொடர்பான ராஜபக்சக்களின் ஆலோசனைகளை பின்பற்றுவதை தவிர்க்குமாறும் அல்லது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...