ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொஹொட்டுவவைச் சேர்ந்த 10 சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அமைச்சர் பதவிகளுக்காக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதுடன், அவர்களில் இருவரை நியமிக்க ஜனாதிபதி இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை.
இது தவிர துமிந்த திசாநாயக்க, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஜீவன் தொண்டமான் ஆகிய 4 பேருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 அமைச்சுப் பதவிகளுக்கு 14 பேர் முன்மொழியப்பட்டுள்ளனர்.