follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசீன தூதுவருக்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு

சீன தூதுவருக்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தான் நம்புவதாகவும் இலங்கைக்கான சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை வெற்றிக் கொள்வதற்கு சீனா உதவிகளை வழங்குவதோடு சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்கள் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர் இதன் போது உறுதியளித்தமை குறிப்பிடதக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...