follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமண்சரிவில் சிக்கிய தாயும் மகனும் சடலமாக மீட்பு - தந்தை வைத்தியசாலையில்

மண்சரிவில் சிக்கிய தாயும் மகனும் சடலமாக மீட்பு – தந்தை வைத்தியசாலையில்

Published on

வரக்காபொல, அகுருவெல்ல, தும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன தாய் மற்றும் மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று (14) மாலை 3.30 மணியளவில் பெய்த கனமழையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

47 வயதுடைய தாய் மற்றும் 24 வயதுடைய மகனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை 4.30 மணியளவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த தந்தை மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட வீட்டில் மற்றுமொரு சிறுவன் இருந்ததுடன் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவன் புலமைப்பரிசில் வகுப்பில் கலந்து கொள்ள சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவன் தற்போது அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...