follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாம் 5 இலட்சம் தருகின்றோம் : எங்கள் பிள்ளைகளை எமக்கு திருப்ப தருவீர்களா?

நாம் 5 இலட்சம் தருகின்றோம் : எங்கள் பிள்ளைகளை எமக்கு திருப்ப தருவீர்களா?

Published on

வடக்கு -கிழக்கில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ,கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டதின் போது யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி,சிவபாதம் இளங்கோதை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சுமார் 13 வருட காலமாக நாம் வீதிகளில் அலைந்து திரிகின்றோம்.எங்களுக்காக குரல் கொடுக்க நாட்டில் யாரும் இல்லை.அதனால் தான் நாம் சர்வதேசத்தை நாடுகின்றோம்.ஆனாலும் இப்போது சர்வதேசமும் எமக்கு கண் துடைப்பாகவே காணப்படுகிறது.

இப்போது எமக்கு இலஞ்சம் கொடுக்க அரசு முனைகிறது.எங்களுடைய பிள்ளைகளின் பெறுமதி உங்களுக்குத் தெரியாது.எமக்கு உங்களின் இலஞ்சம் வேண்டாம்.இப்போது ஒரு உயிருக்கு 2 இலட்சம் ரூபா தருகின்றோம் என்று சொல்கிறார்கள்.இந்தப் பணம் எமக்கு வேண்டாம்.நாம் உங்களுக்கு 5 இலட்சம் தருகின்றோம்.எங்கள் பிள்ளைகளை எமக்கு திருப்ப தருவீர்களா என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...