கோப் குழுவில் பணியாற்ற சரித ஹேரத் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!

367

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் புதிய கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் எம்.பி அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை பேராசிரியர் சரித ஹேரத் நிரப்புவார் என தெரிவித்தார்.

மேலும் கோப் குழுவின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பேராசிரியர் சரித ஹேரத்தை முன்மொழிய எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here