follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்

Published on

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மகாபொல நிதியத்துடன் கலந்துரையாடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக தற்போது மகாபொல விசேட புலமைப்பரிசில் திட்டத்தினூடாக தற்போது மாதாந்தம் 5,500 ரூபா வழங்கப்படுகின்றது.

மகாபொல சாதாரண திட்டத்தினூடாக மாணவரொருவருக்கு மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த கொடுப்பனவுகளை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...