வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவிப்பு

524

குத்தகை தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை குத்தகை தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கப்படாவிட்டால், இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here