22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற முடியாது என்ற கருத்து முற்றாக மறைந்துவிட்டதாகவும், அது தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நடைபெறும் நேரத்தில் அது நிறைவேற்றப்படுவதற்கு 75 வீத வாய்ப்புகள் இருப்பதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவு அறிகிறது
இன்று காலை விவாதத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 இற்கு ஆதரவாக வாக்களிப்பதாக அறிவித்திருந்தினர்.
பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பசில் ராஜபக்ச ஆதரவு எம்.பி.க்கள் சிலரைத் தவிர மொட்டுக் கட்சியில் உள்ள பெரும்பான்மையானோர் 22 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பாராளுமன்ற உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.