follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக தீர்மானம்

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக தீர்மானம்

Published on

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் சேவை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுக்கு அடுத்த வாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அழுத்தம் பிரயோகித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் தமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

சீனி உள்ளிட்ட பல நுகர்வு பொருட்கள் சட்டவிரோதமாக வெவ்வேறு முறைகளில் வெளியேற்றப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

சதோச ஊடாக கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு தொகை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு அவை மீள சதோசவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...