follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுமே.தீவுகளை வீழ்த்தி சுப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்தது அயர்லாந்து அணி!

மே.தீவுகளை வீழ்த்தி சுப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்தது அயர்லாந்து அணி!

Published on

டீ -20 உலகக்கிண்ணத் தொடரின், குழு பி- 11ஆவது தகுதி சுற்று லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி சுப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும் ஜோன்சன் சார்லஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், கரேத் டெலானி 3 விக்கெட்டுகளையும் மெக்கார்த்தி மற்றும் சிம்மி சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதனால், அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று சுப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் டக்கர் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அக்கீல் ஹொசைன் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கரேத் டெலானி தெரிவுசெய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...