follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனை !

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனை !

Published on

நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு அனுமதி கோரி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட மனு அமைச்சரவை உபகுழுவினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் பரிசீலிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

2020 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை தமது பணிக்காலத்தில் கடமையாற்றிய 8,312 பொலிஸார் மற்றும் 1,105 பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் உட்பட 1,105 பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கோரிக்கையை அமைச்சர் அலஸ் அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக பொது பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் தெரிவித்தது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையில் (STF) 54 பேர், பொலிஸ் சார்ஜென்ட்கள் 1,630 பேர் (STF இலிருந்து 122 பேர்), 621 மகளிர் பொலிஸ் சார்ஜென்ட்கள், 6,243 பொலிஸார், 484 மகளிர் பொலிஸ் , 15 பொலிஸ் சார்ஜென்ட் சாரதிகள் மற்றும் 130 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 290 சப் இன்ஸ்பெக்டர்கள் , (கான்ஸ்டபிள்) ஓட்டுநர்கள் அடுத்த பதவி உயர்வுக்கு தகுதியுடையவர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...