தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் இரண்டு வாரங்களுக்குள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்களில் தோல் பராமரிப்பு பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்த பல HS குறியீடுகள் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட இறக்குமதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பொருட்களின் முழுமையான பட்டியல் இறுதி செய்யப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.