follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு நேரடி ஆதரவு வழங்குவதாக கீதா அறிவிப்பு!

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு நேரடி ஆதரவு வழங்குவதாக கீதா அறிவிப்பு!

Published on

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு நாடாளுமன்றில் பிரவேசிக்க முடியாது என்ற தீர்மானம் ஒருவகையில் சரியானதே என குறிப்பிட்டார்.

தனக்கும் சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை இருந்ததாகவும், தனது கணவனும் பிள்ளைகளும் அங்கேயே இருப்பதாக தெரிவித்த அவர், தன்னால் இரட்டை பிரஜாவுரிமையை நீக்க முடிந்ததென்றால் ஏன் அரசாங்கத்தில் உள்ள சிலரால் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

எனவே, இம்முறை ஓடவும் மாட்டேன், ஒழியவும் மாட்டேன் என தெரிவித்த கீதா எம்.பி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நேரடியாக ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...