follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு நேரடி ஆதரவு வழங்குவதாக கீதா அறிவிப்பு!

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு நேரடி ஆதரவு வழங்குவதாக கீதா அறிவிப்பு!

Published on

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு நாடாளுமன்றில் பிரவேசிக்க முடியாது என்ற தீர்மானம் ஒருவகையில் சரியானதே என குறிப்பிட்டார்.

தனக்கும் சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை இருந்ததாகவும், தனது கணவனும் பிள்ளைகளும் அங்கேயே இருப்பதாக தெரிவித்த அவர், தன்னால் இரட்டை பிரஜாவுரிமையை நீக்க முடிந்ததென்றால் ஏன் அரசாங்கத்தில் உள்ள சிலரால் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

எனவே, இம்முறை ஓடவும் மாட்டேன், ஒழியவும் மாட்டேன் என தெரிவித்த கீதா எம்.பி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நேரடியாக ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...