follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு!

Published on

வடக்கு அந்தமான் கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (21) உருவாகி அதே பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது

இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஒக்டோபர் 22ஆம் திகதியன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இது ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஒக்டோபர் 24 ஆம் திகதி சூறாவளியாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, படிப்படியாக வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 25-ம் திகதி மேற்கு வங்கம் மற்றும் பங்காளதேஷ் கடற்கரைக்கு அருகே சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது, காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ ஆக இருக்கும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கலாம்.

கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...