follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவாகனங்களின் விலை தொடர்ந்து குறைவடையும்!

வாகனங்களின் விலை தொடர்ந்து குறைவடையும்!

Published on

வாகனங்களின் விலை தொடர்ந்து குறைவடையும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் நாமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதை நினைத்துப்பார்க்க முடியாது.

இதனால், வாகனங்களின் விலை பெருமளவில் குறைவடையாது.

குறிப்பிடத்தக்களவான வாகனங்களே தற்போது நாட்டில் உள்ளன.

எனினும், குத்தகை கொடுப்பனவுகள் மற்றும் வங்கி வட்டி வீதங்களின் அதிகரிப்பால், வைப்பிலிடுவதற்கும், குத்தகை கொடுப்பனவுக்கு செல்லாதிருக்கவும் மக்கள் முயற்சிக்கின்றனர்.

வாகனங்களின் விலை ஓரளவு குறைவடைந்துள்ளது.

இதனால், தற்போதைய குத்தகை கொடுப்பனவுடன் ஒருவர் வாகனத்தைக் கொள்வனவு செய்வாராயின், அவருக்கு பாரியளவில் பாதகம் ஏற்படாது.

ஏனெனில், முன்னர் இருந்த விலைக்கு சமமான விலையே தற்போதுள்ளது.

முன்னதாக, அதிக விலைக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், குறைந்த அளவு வட்டிவீதத்தில் குத்தகை கொடுப்பனைப் பெற்றனர்.

தற்போது, குறைந்த விலைக்கு வாகனம் உள்ள நிலையில், அதனை அதிக விலைக்குப் பெறுகின்றனர்.

எனவே, இந்த இரண்டும் சமமானதாகும் என்றும், ஒருவருக்கு வாகனத்தைக் கொள்வனவு செய்ய இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் நாமல் ஹேவா விதாரண தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...