follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவாகனங்களின் விலை தொடர்ந்து குறைவடையும்!

வாகனங்களின் விலை தொடர்ந்து குறைவடையும்!

Published on

வாகனங்களின் விலை தொடர்ந்து குறைவடையும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் நாமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதை நினைத்துப்பார்க்க முடியாது.

இதனால், வாகனங்களின் விலை பெருமளவில் குறைவடையாது.

குறிப்பிடத்தக்களவான வாகனங்களே தற்போது நாட்டில் உள்ளன.

எனினும், குத்தகை கொடுப்பனவுகள் மற்றும் வங்கி வட்டி வீதங்களின் அதிகரிப்பால், வைப்பிலிடுவதற்கும், குத்தகை கொடுப்பனவுக்கு செல்லாதிருக்கவும் மக்கள் முயற்சிக்கின்றனர்.

வாகனங்களின் விலை ஓரளவு குறைவடைந்துள்ளது.

இதனால், தற்போதைய குத்தகை கொடுப்பனவுடன் ஒருவர் வாகனத்தைக் கொள்வனவு செய்வாராயின், அவருக்கு பாரியளவில் பாதகம் ஏற்படாது.

ஏனெனில், முன்னர் இருந்த விலைக்கு சமமான விலையே தற்போதுள்ளது.

முன்னதாக, அதிக விலைக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், குறைந்த அளவு வட்டிவீதத்தில் குத்தகை கொடுப்பனைப் பெற்றனர்.

தற்போது, குறைந்த விலைக்கு வாகனம் உள்ள நிலையில், அதனை அதிக விலைக்குப் பெறுகின்றனர்.

எனவே, இந்த இரண்டும் சமமானதாகும் என்றும், ஒருவருக்கு வாகனத்தைக் கொள்வனவு செய்ய இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் என்றும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் நாமல் ஹேவா விதாரண தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...