follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுஇலங்கை அணி அபார வெற்றி

இலங்கை அணி அபார வெற்றி

Published on

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் மஹீஷ் திக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 129 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் குசல் மென்டிஸ் 68 ஓட்டங்களையும், சரித் 31 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்சன டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனார்.

அதனடிப்படையில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...