follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபசிலின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது – ஜே.சி.அலவத்துவல

பசிலின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது – ஜே.சி.அலவத்துவல

Published on

பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்பது இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவின் வார்த்தைகளுக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் இதன் மூலம் அவருக்கு அதிகாரம் இல்லாதமை புலப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் இன்று மக்கள் வாழ முடியாத மிக மோசமான நிலைமை உருவாகி உள்ளதாகவும், பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக அடமானம் வைப்பதற்கு எதுவுமில்லாமல் மக்கள் தவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பாடசாலை மாணவர்களில் சுமார் முப்பது வீதமானவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...