follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதனது காலத்தைப் போல் நட்புறவு கொண்ட வெளியுறவுக் கொள்கை இல்லை – மைத்திரி கவலை

தனது காலத்தைப் போல் நட்புறவு கொண்ட வெளியுறவுக் கொள்கை இல்லை – மைத்திரி கவலை

Published on

நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் தற்போது நெருக்கடி நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், எந்த பாகுபாடும் இன்றி உலக நாடுகள் அனைத்தும் உதவியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் உலக நாடுகள் அனைத்து நாடுகளும் உதவிகளை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு வெளியுறவுக் கொள்கையே காரணம் என சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் வெளியுறவுக் கொள்கை குறித்து அதிருப்தி வெளியிட்டார்.

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திலும் பாரிய கேள்விக்குரிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...