ஒக்டோபர் 12 ஆம் திகதி அஹுங்கல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று (23) ரம்புக்கனை, வாகொல்லவத்தை, பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி அஹுங்கல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபர்கள் வந்த காரை ஓட்டி சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 41 வயதான ரம்புக்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.