follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபல வாகனங்களை பயன்படுத்தி எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்

பல வாகனங்களை பயன்படுத்தி எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்

Published on

2015-2019 காலகட்டத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் வரம்பை மீறி 24 வாகனங்களைப் பயன்படுத்தியதாக தேசியக் கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.

இதன்படி, சுகாதார அமைச்சர் பதினாறு வாகனங்களையும், இராஜாங்க அமைச்சர் மேலும் எட்டு வாகனங்களையும் பயன்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அமைச்சருக்கு வருடாந்த எரிபொருள் கொடுப்பனவாக 20 இலட்சம் ரூபாயும், இராஜாங்க அமைச்சர் 40 இலட்சம் ரூபாயையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை விட மேலதிகமாக பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் தேசியக் கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...