follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசேவையை தொடர நாம் கோரிய 30 லீற்றர் பெற்றோல் தேவை!

சேவையை தொடர நாம் கோரிய 30 லீற்றர் பெற்றோல் தேவை!

Published on

வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை ஐந்து லீற்றர் அதிகரிக்குமாறு ஜனாதிபதி பரிந்துரை செய்த போதிலும் சேவையைத் தொடர தாம் கோரிய 30 லீற்றர் பெற்றோலை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா இன்று ங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது தாங்கள் எதற்காக 30 லீற்றர் பெற்றோல் கேட்கின்றோம் என குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் தங்களின் பிரச்சினைக்கு பதில் கூறாமல் அலட்சியமாக இருந்தனர் என்றும் எனினும் பின்னர் ஜனாதிபதி 5 லீற்றர் பெற்றோலுக்கு பரிந்துரை செய்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டயர்கள், டியூப்கள்,பேட்டரிகள் மற்றும் வாகன சேவைக் கட்டணங்கள் மீதான வரிகள் இன்னும் அதிகமாக இருப்பதால் சேவையைத் தொடர இது உதவாது என்றும் அவர் கூறினார்.

தங்களுக்கு 15 லீற்றர் பெற்றோல் கிடைக்கும் என்று உறுதி செய்யப்படாத வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் ஆனால் தேவையான அளவு கிடைக்கும் வரை, கட்டணத்தை குறைப்பது பற்றி யோசிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே தங்களின் சேவையை வலுப்படுத்தும் வகையில் தங்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு மீண்டும் அரசிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...