கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழாவில் மியன்மார் இராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் காரணமாக விழாவில் கலந்துகொண்ட பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மரில் வன்முறை குறித்து விவாதிக்க தென்கிழக்காசிய வெளியுறவு அமைச்சர்கள் இந்தோனேசியாவில் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.