follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

Published on

அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைக்கப்படும் வேட்பு மனுக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

பக்கச்சார்பின்றி அந்த பேரவைக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர், சபநாயகர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிடம் அந்த சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்காக மேற்கொள்ளப்படும் சகல நியமனங்களும், பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த பேரவைக்காக நியமிக்கப்படும் பிரதிநிதிகள் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் நற்பெயருடன் கூடியவராக இருத்தல் அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான தவிசாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் பெயரிடும் முறைமை வெளிப்படைதன்மையுடன் இருத்தல் அவசியம் என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...