பிள்ளைகளின் பசியை தீர்க்க பெற்றோர்கள் வீதிக்கு இறங்குவார்கள்! – ஹிருணிகா

548

உண்மையான போராட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

முன்னைய போராட்ட அமைப்பு ராஜபக்ஷக்களை வீட்டிற்கு துரத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்தக் கிளர்ச்சி பெற்றோரால் வீட்டிலிருந்து தொடங்கும் என்றும் குழந்தைகளின் பசி தாங்க முடியாததால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தெருவில் இறங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெற்றோர்கள் ஒன்றுகூடுவார்கள் என்றும் அந்த பெற்றோரின் எரியும் பிரச்சினைகளுடன் இந்த தலைவர்கள் விளையாட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் புதிய ஆர்ப்பாட்டம் தொடங்கும் என்றும் எனவே டிசம்பர் இறுதிக்குள் இவை அனைத்தும் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு அழைப்பதைத் தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here