குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட பிழையினால் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
‘எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை நான் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கும் செல்ல திட்டமிட்டேன் ஆனால் குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட சிக்கலினால் எனது பயணத்தில் தடை ஏற்பட்டது, இது குறித்து நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன், விரைவில் எனது பயணத்தைத் தொடங்குவேன்’ என்று ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.