follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுலேடி ரிட்ஜ்வேயில் 30 மில்லியன் மின்சார நிலுவைத்தொகை !

லேடி ரிட்ஜ்வேயில் 30 மில்லியன் மின்சார நிலுவைத்தொகை !

Published on

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் 30 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தால், மருத்துவமனையின் பல பிரிவுகளுக்கான மின் இணைப்பை மின்சார சபையினர் புதன்கிழமை துண்டித்ததால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

புதன் கிழமை (26) உணவகங்கள் மற்றும் பாதுகாப்பு அலுவலகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, ஆனால் அது மருத்துவமனை நோயாளிகளின் சிகிச்சை மையங்களை பாதிக்கவில்லை என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளர் கலாநிதி விஜேசூரிய தெரிவித்துள்ளார்

எமது பாவனைக்கு ஏற்ப மின்கட்டணத்தை செலுத்துவது எமது பொறுப்பாகும்.எனவே சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்துவதற்கான வழியை காண தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

வைத்தியசாலை சேவை என்பது வருமானத்திற்கு பயன்படுத்த முடியாத சேவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...