follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுலேடி ரிட்ஜ்வேயில் 30 மில்லியன் மின்சார நிலுவைத்தொகை !

லேடி ரிட்ஜ்வேயில் 30 மில்லியன் மின்சார நிலுவைத்தொகை !

Published on

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் 30 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தால், மருத்துவமனையின் பல பிரிவுகளுக்கான மின் இணைப்பை மின்சார சபையினர் புதன்கிழமை துண்டித்ததால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

புதன் கிழமை (26) உணவகங்கள் மற்றும் பாதுகாப்பு அலுவலகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, ஆனால் அது மருத்துவமனை நோயாளிகளின் சிகிச்சை மையங்களை பாதிக்கவில்லை என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளர் கலாநிதி விஜேசூரிய தெரிவித்துள்ளார்

எமது பாவனைக்கு ஏற்ப மின்கட்டணத்தை செலுத்துவது எமது பொறுப்பாகும்.எனவே சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்துவதற்கான வழியை காண தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

வைத்தியசாலை சேவை என்பது வருமானத்திற்கு பயன்படுத்த முடியாத சேவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...