அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம்!

906

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலமாக பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டது.

அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 500,000 அட்டைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here