follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசிறார்களிடையே இன்புளுவென்சா தொற்று அதிகரிப்பு!

சிறார்களிடையே இன்புளுவென்சா தொற்று அதிகரிப்பு!

Published on

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வாந்தி முதலான நிலைமைகள் தொடர்ந்தால், சிறார்களை, பாடசாலைக்கோ அல்லது பராமரிப்பு நிலையங்களுக்கோ அனுப்புவதைத் தவிர்க்குமாறு கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின், சிறுவர் நோய் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

சிறார்களிடையே இன்புளுவென்சா வைரஸ் பரவும் நிலை அதிகரிப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக உள்ளதென எமது செய்திச் சேவை வினவியபோது அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடன் குளிரான காலநிலை காணப்பட்டது. இதன் காரணமாக சிறார்களிடையே காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வாந்தி முதலான நோய்யறிகுறிகள் அதிகரித்தன.

அவர்களில் சிலரது மாதிரிகளை பரிசோதணைக்குட்படுத்தியதில் இன்புளுவென்சா வைரஸ் பரவல் அதிகரித்தது.

இன்புளுவென்சா வைரஸ் வேகமாக பரவும் எனவே சிறார்களிடையே குறித்த நோய் அறிகுறிகள் அதிகரித்தால் அது இன்புளுவென்சா நோய்த் தொற்றாக இருக்க கூடும்.

இந்த அறிகுறிகள் தென்படும் சிறார்களை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். குறிப்பாக அந்த சிறார்களுக்கு பரசிடமோல் மாத்திரை வழங்குவதுடன், இயற்கையான நீர் ஆகாரங்களை வழங்கி ஓய்வளிக்க வேண்டும்.

இந்த சிறார்களை பாடசாலைகளுக்கோ அல்லது பராமரிப்பு நிலையங்களுக்கோ அனுப்பினால் ஏனைய சிறார்களுக்கும் இந்த தொற்று விரைவில் பரவும். எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கொழும்பு ரிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின், சிறுவர் நோய் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...