follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்படும் மாகாண சபைகள்!

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்படும் மாகாண சபைகள்!

Published on

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாது பல மாகாண சபைகள் தமது விருப்பத்திற்கேற்ப அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில ஆளுனர்களின் தயவால் இவ்வாறு ஓய்வு பெற்ற அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்களது ஓய்வூதியம் தவிர மற்றுமொரு உதவித்தொகையை இப்பதவிகளில் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக மேல் மாகாணத்தில் மாநகர ஆணையாளர்களாக ஓய்வுபெற்ற பத்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், ஓய்வூதியங்களை சிக்கனமாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.

அவ்வாறு வெளியேறிய அதிகாரிகளுக்கு வேறு சம்பளம் வழங்கி பணியமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பாக நிதியமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...