follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபாடசாலையில் அதிகரிக்கும் போதைப்பொருள் : கண்காணிக்க விசேட குழு!

பாடசாலையில் அதிகரிக்கும் போதைப்பொருள் : கண்காணிக்க விசேட குழு!

Published on

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை பரவுவதை தடுப்பதற்காக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட கண்காணிப்புக் குழுக்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க கடந்த வாரம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விசேட  கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மேல்மாகாண பிரதம செயலாளருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...