பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை பரவுவதை தடுப்பதற்காக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட கண்காணிப்புக் குழுக்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க கடந்த வாரம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விசேட கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மேல்மாகாண பிரதம செயலாளருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.