follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாடசாலையில் அதிகரிக்கும் போதைப்பொருள் : கண்காணிக்க விசேட குழு!

பாடசாலையில் அதிகரிக்கும் போதைப்பொருள் : கண்காணிக்க விசேட குழு!

Published on

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை பரவுவதை தடுப்பதற்காக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட கண்காணிப்புக் குழுக்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க கடந்த வாரம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விசேட  கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மேல்மாகாண பிரதம செயலாளருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...