follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்!

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்!

Published on

கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வட மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் வட மாகாணத்தில் 485 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்

மேலும் 2021 ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 105 ஆகக் குறைந்துள்ளதாகவும், ஆனால் 2022 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கில் 519 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி சென்றுள்ளதாகவும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் வேலைகளை இழந்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் மாகாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு வேலை தேடிச் செல்வதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...