follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமலேசிய அரசாங்கத்தால் மருத்துவப் பொருட்கள் நன்கொடை

மலேசிய அரசாங்கத்தால் மருத்துவப் பொருட்கள் நன்கொடை

Published on

இலங்கைக்கான மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறு இலங்கையின் சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவைக் கோரியிருந்தது. அந்த வகையில், இலங்கைக்கு அவசரமாகத் தேவையான மருத்துவப் பொருட்கள் உள்ளடங்கிய நன்கொடையை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

நேற்று மலேசிய சுகாதார அமைச்சில் நடைபெற்ற கையளிப்பு வைபவத்தில், மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், நன்கொடையை (63,100 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொதி) மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரான விமானப்படைத் தளபதி (ஓய்வு பெற்ற) சுமங்கலா டயஸ் அவர்களிடம் கையளித்தார்.

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நன்கொடைக்கான விமானப் போக்குவரத்தை நல்கியதுடன், 2022 அக்டோபர் 29ஆந் திகதி கோலாலம்பூரில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் ருடு 319 மூலம் அந்தப் பொதி அனுப்பி வைக்கப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...