follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டம் : 43,700 அமெரிக்க டொலர்கள்...

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டம் : 43,700 அமெரிக்க டொலர்கள் இலாபம்

Published on

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளது.

பன்னிபிட்டிய – வியாட்புர, கொட்டாவ மற்றும் மாலம்பே பிரதேசங்களில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இந்த 3 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 10 வீடுகளை வாங்குவதற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...