follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுசீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் நாட்டிற்கு!

சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் நாட்டிற்கு!

Published on

சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் ஏதேனும் உதவிகள் கிடைத்துள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையானது பத்து மாதங்கள் மிகவும் நெருக்கடியான காலத்தை கழித்ததாகவும் அதன் காரணமாகவே எரிசக்தி துறையில் நெருக்கடி ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதனூடாக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தனியார் விநியோகஸ்தர்களுக்கு இத்துறையில் பிரவேசிப்பதற்கான சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்புகள் திருத்தியமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 70 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...