follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாளைய போராட்டத்திற்கு சுதந்திரக் கட்சியும் ஆதரவு!

நாளைய போராட்டத்திற்கு சுதந்திரக் கட்சியும் ஆதரவு!

Published on

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக நாளை (2) நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு நிச்சயம் ஆதரவு வழங்குவோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்ச குடும்ப ஆட்சி மற்றும் ஐ.தே.க. ஆட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து புதிய அரசாங்கத்தை அமைக்க கட்சி செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

உருவாக்கப்படும் புதிய அரசாங்கம், ஊழலற்ற மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...