வடமாகாணத்தில் 1000 ஏக்கர் சபாரி சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான காணியை தேடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய மிருகக்காட்சிசாலைகளில் உள்ள சில வகை விலங்குகள் மற்றும் தற்போது நகர்ப்புறங்களில் பரவி மக்களின் தோட்டங்களுக்கு தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை இந்த பூங்காவிற்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் யால தேசிய பூங்காவிற்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள சஃபாரி வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.