follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் மனித உரிமை ஆணைக்குழு!

ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் மனித உரிமை ஆணைக்குழு!

Published on

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்றைய ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும்வலியுறுத்தியுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தி;ற்கான அனுமதியை பெறுமாறு பொலிஸார் தங்களிற்கு சட்டவிரோதமாக அனுப்பிவைத்துள்ளனர் என தொழிற்சங்கங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரிவித்தமைக்கு பதில் அளிக்கையில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

பொலிஸ் கட்டளை சட்டத்தின் 77 பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டங்களிற்கு அனுமதியுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசமைப்பே நாட்டின் அதி உச்ச சட்டம் என பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமை ஆணைக்குழு அடிப்படை உரிமைகளை மீறுவதால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 28 ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட பரிந்துரைகளை பின்பற்றுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...