பதிவாளர் நாயகத்துக்கு பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

423

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்துக்கு  இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயத்துக்கு இடையூறாக காணப்படும் முன்னைய சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று (2) காலை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here