follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடு50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

Published on

கார்ட்போர்ட் பெட்டிக்குள் மிக சூட்சுமமாக மறைத்து கொண்டுவரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் , இலங்கை சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவிற்கு கிடைத்த தபால் பொதியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தனியார் பாவனைக்கான பொருட்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டு இந்த பொதி ஜெர்மனியிலிருந்து அங்கொடை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பொதியினுள் கார்ட்போரட் பெட்டியொன்றினுள் மிகவும் நுட்பமான முறையில் பொதியிடப்பட்ட 2,387 கிராம் நிறையுடைய 4,956 மெத்தபெட்டமின் எனப்படும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் சுமார் 49.56 மில்லியன் ரூபா பெறுமதி என சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னரான அடுத்தகட்ட விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதை வில்லைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

விஞ்ஞானப் பாட வினாத்தாளில் 02 வினாக்களுக்கு இலவசப் புள்ளி

சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் இரண்டு வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. விஞ்ஞான...

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு – வருடத்திற்கு 16.6 பில்லியன் ரூபா செலவு

பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின்...

கொழும்பில் வெப்பநிலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர...