follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடு50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

Published on

கார்ட்போர்ட் பெட்டிக்குள் மிக சூட்சுமமாக மறைத்து கொண்டுவரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் , இலங்கை சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவிற்கு கிடைத்த தபால் பொதியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தனியார் பாவனைக்கான பொருட்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டு இந்த பொதி ஜெர்மனியிலிருந்து அங்கொடை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பொதியினுள் கார்ட்போரட் பெட்டியொன்றினுள் மிகவும் நுட்பமான முறையில் பொதியிடப்பட்ட 2,387 கிராம் நிறையுடைய 4,956 மெத்தபெட்டமின் எனப்படும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் சுமார் 49.56 மில்லியன் ரூபா பெறுமதி என சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னரான அடுத்தகட்ட விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதை வில்லைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...