கடந்த 24 மாதங்களில் குறைந்தது 17 சிறுவர்களாவது பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட இலங்கையிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் ‘Stop Child Cruelty Trust’ மற்றும் Child Protection Alliance கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிறுவர் துஷ்ப்ரயோகங்களை நிறுத்து அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வைத்தியர் துஷ் விக்கிரமநாயக்க இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
“குழந்தை உரிமைகள் அரசியலாக்கப்பட வேண்டும். எந்தவொரு குறிப்பிட்ட கட்சி அல்லது நிறத்தால் அல்ல. ஆனால் சகல அரசியல் நிகழ்ச்சி நிரல்களிலும் சிறுவர் பாதுகாப்பு உள்ளடக்கப்பட வேண்டிய காலகட்டம் இது, என வைத்தியர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினையை முன்னணியில் வைத்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து, நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதிக்க வேண்டும் எனவும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடுமாறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வைத்தியர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து மட்டங்களிலும் இந்த பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும்
SLPP நிகழ்ச்சி நிரலிலும் இதை சேர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ‘Stop Child Cruelty Trust’ மற்றும் Child Protection Alliance க்கு உறுதியளித்துள்ளார்.